சனி, 22 ஜனவரி, 2011

சிவில் சர்வீசஸ் தேர்வு - ஓர் அறிமுகம்!


இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

அரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது. இத்தேர்வு சம்பந்தமான விவரங் களைப் பார்ப்போம்.

சிவில் சர்வீசஸ் பணித் துறைகள்

சிவில் சர்வீசஸ் தேர்வானது 26-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இருபத்தியாறு பணித்துறைகளில் ஏதேனும் ஒன்றில் வாய்ப்புக் கிடைக்கிறது. அவை:

1. இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)

2. இந்திய அயல்நாட்டுப்பணி (Indian Foreign Service)

3. இந்திய காவல் பணி (Indian Police Service)

4. இந்திய அஞ்சலகத் தந்திக் கணக்குகள் மற்றும் நிதி பணி, பிரிவு "அ' (Indian P & T Accounts & Finance Service, Group 'A')

5. இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் பணி பிரிவு "அ' (Indian Audit & Accounts Service, Group 'A')

6. இந்திய சுங்கம் மற்றும் கலால் வரி பணி, பிரிவு "அ' (Indian Customs & Central Excise Service, Group 'A')

7. இந்திய பாதுகாப்புத்துறை கணக்குப் பணிபிரிவு "அ' (Indian Defence Accounts Service, Group 'A')

8. இந்திய வருவாய் பணி, பிரிவு "அ' (Indian Revenue Service, Group 'A')

9. இந்தியத் துப்பாக்கித் தொழிற்சாலைகள் பணிபிரிவு "அ' (உதவி மேலாளர், தொழில் நுட்பம் சாராதது) (Indian Ordinance Factories Service, Group 'A' Assistant Works Manager, Non-Technical)

10. இந்திய அஞ்சல் பணி, பிரிவு "அ' (Indian Postal Service, Group 'A')

11. இந்தியக் குடிமைக் கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Civil Accounts Service, Group 'A')

12. இந்திய இரயில்வே போக்குவரத்து, பணிபிரிவு "அ' (Indian Railway Traffic Service, Group 'A')

13. இந்திய இரயில்வே கணக்குப்பணி, பிரிவு "அ' (Indian Railway Accounts Service, Group 'A')

14. இந்திய இரயில்வே பணியாளர்கள் பணி, பிரிவு "அ' (Indian Railway Personnel Service, Group 'A')15. இரயில்வே பாதுகாப்புப் படையில், உதவிப் பாதுகாவல் அலுவலர் பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Security Officer, Group 'A' in Railway Protection Force)

16. இந்தியப் பாதுகாப்பு நிலைகள் பணி, பிரிவு "அ' (Indian Defence Estates Service, Group 'A')

17. இந்திய தகவல் தொடர்புப் பணி, (இளநிலை) பிரிவு "அ' (Indian Information Service, (Junior Grade) Group 'A')

18. மையத்தொழிலகப் பாதுகாப்புப் படையில் உதவி ஆணையாளர், பிரிவு "அ' பதவிகள் (Posts of Assistant Commandant Group 'A' in Central Industrial Security Force)

19. மைய அரசு செயலகப்பணி, பிரிவு "B (பிரிவு அலுவலர் நிலை)

20. புகைவண்டி வாரியச் செயலகப் பணி, பிரிவு "B' (பிரிவு அலுவலர் நிலை)

21. ஆயுதப்படை தலைமையகக் குடிமைப் பணி பிரிவு "B' (குடிமக்கள் பணியாள் உதவி அலுவலர் நிலை)

22. சுங்கத்துறை மதிப்பீட்டாளர் பணி, பிரிவு "B'

23. தில்லி, அந்தமான்-நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி குடிமை பணி, பிரிவு "B'

24. தில்லி, அந்தமான்- நிகோபார் தீவுகள், இலட்சத்தீவு, டையூ- டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி காவல் பணி பிரிவு "B'

25. புதுச்சேரி குடிமைப்பணி, பிரிவு "B

26. புதுச்சேரி காவல் பணி, பிரிவு "B'

இப்பணிகளுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பதை இத்தேர்வு அறிவிப்பின் போது, எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும். அக்காலியிடங்களுக் குத் தக்கவாறு இத்தேர்வு நடத்தப்படும்.

தேர்வுத் திட்டம்

சிவில் சர்வீசஸ் தேர்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.

1. முதனிலைத் தேர்வு (Preliminary Exam)

2. பிரதானத்தேர்வு (Main Exam)

3. நேர்முகத்தேர்வு (Interview - Personality Test)

ஆகியவை ஆகும். முதனிலைத்தேர்வு எழுதி தகுதிபெற்றவர்கள் பிரதானத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது முதனி லைத் தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவுடன் யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு எழுத விண்ணப் பத்தை அனுப்பிவைக்கும். அதில் பிரதானத் தேர்வு விபரங்கள் அனைத்தும் அடங்கியிருக் கும். பிரதானத் தேர்வை எழுதி முடித்து அதில் வெற்றிப் பெற்றால் உங்களுடைய பிரதானத் தேர்வு மதிப்பெண்கள் கொண்ட தர வரிசையின் படி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் படுவீர்கள். நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.

பிரதானத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப் படும். அதில் நீங்கள் விருப்பம் தெரிவித்த பணியை உங்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும்.

தேர்வு எழுத தகுதிகள்

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத விரும்புபவர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு போதுமானது. அதே சமயம் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் தங்களது படிப்பு பட்டப்படிப்புக்கு இணையானது எனில் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் இளங்கலை பட்டங்கள் பெற்றவர்கள், முதுகலைப்பட்டம், ஆராய்ச்சிப்படிப்பு என அனைவரும் விண்ணப்பிப்பர்.

வயது வரம்பு:

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பப் பெற்ற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதுவரை இத்தேர்வினை எழுதலாம். குறைந்தப் பட்ச வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து கணக் கிடப்படுகிறது. இந்த 21-30 வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.

அட்டவணை வகுப்பினர் (S.C.), அட்ட வணை பழங்குடியினர் (S.T.) 35 வயதுவரை இத்தேர்வை எழுதலாம்.

இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அதாவது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட் டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் (MBC) பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் மத்திய அரசு அளவில் இதர பிற்படுத்தப்பட் டோர் OBC ஆவர். இப்பிரிவினர் 33 வயது வரை இத்தேர்வை எழுதலாம். அதே போல உடல் ஊனமுற்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எதிரி நாட்டோடு போர்புரிந்து உடலுறுப்பு பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத ராணுவத் தினருக்கு மூன்று ஆண்டுகளும் (33 வயது வரை), குறைந்தது ஐந்து ஆண்டுகள் சேவை பணி முடித்த முன்னாள் இராணுவத்தினருக்கு ஐந்து ஆண்டுகளும் (35 வயது வரை) தளர்த்தப் பட்டுள்ளது.

எத்தனை முறை தேர்வு எழுதலாம்?

நாம் கல்லூரியில் படிப்புக்குரிய பாடங் களில் தேர்ச்சி பெறவில்லையெனில், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வு அப்படியல்ல. இத்தேர்வு எழுதுவதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது ஒருசில தடவை (Number of Attempts) மட்டுமே இத் தேர்வை எழுத முடியும். ஆனாலும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுப்பிரிவினர் நான்கு முறை மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்களின் வயது வரம்பிற்கு உட்பட்டு ஏழு முறை தேர்வை எழுதலாம்.

பட்டியல் வகுப்பினர் (SC/ST) தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டு மானாலும் தேர்வை எழுதலாம். தேர்வு நடை பெறும்போது ஒருமுறை தேர்வை எழுதி னாலும் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப் படும். அதனால் விதிக்கப்பட்டுள்ள கால வரம்புக்குள் நம் அறிவை கொண்டு தேர்வில் வெற்றிப் பெற்றிட வேண்டும்.

விண்ணப்பித்தல்

ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு களுக்கான அறிவிப்பானது Employment News வார இதழில் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் தேர்வு குறித்து Special Supplementary தனியாக வெளிவரும். அதில் தேர்வு குறித்த முழு விபரம் தரப்பட்டிருக்கும். அதையடுத்து முக்கியமாக, விண்ணப்பம் வாங்க வேண்டும். UPSC விண்ணப்பம் அனைத்து மாவட்டத் தலைமை அஞ்சலகங்களிலும் கிடைக்கும்.

முதனிலைத் தேர்வு (Preliminary Examination)

முதனிலைத் தேர்வில், ஒரு பொது அறிவுத்தாள் மற்றும் ஒரு விருப்பப் பாடத்திற் கான தேர்வு நடைபெறும். இந்தியாவில் பல மையங்களில் இத்தேர்வு நடைபெறும். தமிழகத்தில் ஒரே நாளில் சென்னை, மதுரை ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். விருப்பப்பாடம் காலை நேரத்திலும், மாலை நேரத்தில் பொதுஅறிவுத் தேர்வும் நடத்தப் படுகிறது. விருப்பப்பாடத்தில் 120 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கு 300 மதிப்பெண்கள். பொதுஅறிவுத்தாளில் 150 கேள்விகள் கேட்கப் படும். இதற்கான மதிப்பெண்கள் 150. ஆக இரண்டு தாள்களுக்கும் சேர்த்து 450 மதிப் பெண்களுக்கு முதனிலைத்தேர்வு நடத்தப் படுகிறது. வங்கித்தேர்வை போன்று நெகடிவ் மதிப்பெண்கள் இத்தேர்விலும் உண்டு. இத்தேர்வில் வெற்றிபெற வாய்ப்பு என்கிற போது சுமாராக சொன்னால், விருப்பப் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கு குறைந்தது 250 மதிப்பெண்கள்-அதாவது 120 கேள்வி களுக்கு 100 கேள்விகள் சரியாக பதில் அளித்தால் போதுமானது.

பொது அறிவுத் தேர்வில் குறைந்தது 100 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முதனிலைத் தேர்வில் நீங்கள் வெற்றிபெற்று விடலாம். இந்த தேர்வு முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதுவதற்கான தகுதித் தேர்வு மட்டும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

முதனிலைத் தேர்வு விருப்பப்பாடம்

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்போது என்னென்ன விருப்பப் பாடங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.

1. வேளாண்மை (Agriculture)

2. கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary Science)

3. தாவரவியல் (Botany)

4. வேதியியல் (Chemistry)

5. கட்டுமானப் பொறியியல் ((Civil Engineering)

6. வணிகவியல் (Commerce)

7. பொருளாதாரம் (Economics)

8. மின் பொறியியல்(Electrical Engineering)

9. புவியியல் (Geography)

10. புவியமைப்பியல் (Geology)

11. இந்திய வரலாறு (Indian History)

12. சட்டம் (Law)

13. கணிதம் (Mathematics))

14. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

15. மருத்துவ அறிவியல் (Medical Science)

16. தத்துவம் (Philosophy)

17. இயற்பியல் (Physics)

18. அரசியல் அறிவியல்(Political Science)

19. உளவியல் (Psychology)

20. பொது நிர்வாகம் (Public administration)

21. சமூகவியல் (Sociology)

22. புள்ளியியல் (Statistics)

23. விலங்கியல் (Zoology)

போன்ற 23 விருப்பப்பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் விரும்பும் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தில் குறித்திட வேண்டும்.

பிரதானத்தேர்வு (Main Exam)

சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவரே பிரதானத்தேர்வை எழுதத் தகுதிப் பெற்றவர் ஆவார். பிரதானத் தேர்வு என்பது எழுத்துத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக் கியது. இதுவே இந்திய அரசின் பல்வேறு உயர்நிலை பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதானத் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும். அதனைப் பெற்று மீண்டும் இத்தேர்வுக்காக விண்ணப் பிக்க வேண்டும். எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவோ அதைவிட 12 அல்லது 13 மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதானத் தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த பிரதானத்தேர்வுதான் உங்களின் வெற்றி மற்றும் பணியிடங்களை தீர்மானிக் கிறது. இத்தேர்வானது விண்ணப்பதாரரின் புத்திக்கூர்மையையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீடு செய்வதாகும். இத்தேர்வு முழுக்க முழுக்க விரிவாக விடை யெழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு. இதில் உங்களின் பதில் அளிக்கும் திறனே முக்கியமானதாகும்.

பிரதானத்தேர்வு ஒன்பது தாள்களைக் கொண்டது

* தாள் I ஏதேனும் ஒரு இந்திய மொழி

(அரசியலமைப்பு அட்டவணையில் உள்ளடங்கிய இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பித்தவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)

இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் II ஆங்கிலம் (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் III கட்டுரை (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 200 மதிப்பெண்கள்

* தாள் IV (அ) பொது அறிவு - 1 இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் V (ஆ) பொது அறிவு - 2 இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் யஒ விருப்பப்பாடம் 1 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VI விருப்பப்பாடம் 1 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VII விருப்பப்பாடம் 2 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்

* தாள் VIII விருப்பப்பாடம் 2 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்



விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடத்திலிருந்து இரண்டு தாள்கள் 1 (அ) 1 (ஆ) & 2 (அ) 2 (ஆ) ) ஆக மொத்தம் நான்கு தாள்கள் (2x2=VI, VII, VIII, IX) எழுத வேண்டும். இது தவிர இரண்டு மொழித் தாள்கள் (I, II), இரண்டு பொது அறிவுத் தாள்கள் (IV, V), ஒரு கட்டுரை (III)ஆக மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும். இரண்டு மொழித் தாள்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவைகளுக்கு மொத்தம் 2000 மதிப்பெண்கள் ஆகும்.

பிரதானத்தேர்வு விருப்பப் பாடத்திற்குத் தேர்வாணையத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஏதேனும் இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.



பிரதானத்தேர்வுக்கான விருப்பப் பாடங்கள் :

1. வேளாண்மை (Agriculture)

2. கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary)

3. மானிடவியல் (Anthropology)

4. தாவரவியல் (Botany)

5. வேதியியல் (Chemistry)

6. கட்டடப் பொறியியல் (Civil Engineering)

7. வணிகவியலும் கணக்கியலும் (Commerce & Accountancy)

8. பொருளாதாரம் (Economics)

9. மின் பொறியியல் (Electrical Engineering)

10. புவியியல் (Geography)

11. புவியமைப்பியல் (Geology)

12. வரலாறு (History)

13. சட்டம் (Law)

14. மேலாண்மை (Management)

15. கணிதம் (Mathematics)

16. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)

17. மருத்துவ அறிவியல் (Medical Science)

18. தத்துவம் (Philosophy)

19. இயற்பியல்(Physics)

20. அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்புகள் (Political and International Relations)

21. உளவியல் (Psychology)

22. பொது நிர்வாகம்(Public Administration)

23. சமூகவியல் (Sociology)

24. புள்ளியியல் (Statistics)

25. விலங்கியல் (Zoology)

26. இலக்கியம் (Literature)

(இது பின்வரும் ஏதேனும் ஒரு மொழி இலக்கியத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம்.)

1. தமிழ் 2. ஆங்கிலம்

3. மலையாளம் 4. தெலுங்கு

5. கன்னடம் 6. இந்தி

7. மராத்தி 8. உருது

9. ஒரியா 10. சமஸ்கிருதம்

11. குஜராத்தி 12. வங்காளம்

13. பஞ்சாபி 14. நேப்பாளி

15. சிந்தி 16. மணிப்பூரி

17. காஷ்மீரி 18. கொங்கணி

19. பாலி 20. பெர்சியன்

21. அஸ்ஸாமி 22. அரபு

23. சீனம் 24. பிரெஞ்ச்

25. ஜெர்மனி 26. ரஷ்யன்

பிரதானத்தேர்வில் இரண்டு விருப்பப் பாடங்கள் என்றாலும் சில விருப்பப் பாடங்களைச் சேர்த்து எழுத முடியாது.

நேர்முகத்தேர்வு
(Personality Test)

பிரதானத் தேர்வில் தேர்வாணையத்தால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் களை பெற்றவர்கள்- அவர்களின் ஆளுமையை சோதிப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. (தகுதிக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் கிடை யாது) இதில் புத்திக்கூர்மை, நடப்பு நிகழ்வு களில் உள்ள அக்கறை, சமூக சேவை மனப் பான்மை, பாடத்தில் புரிந்துகொண்ட திறன், ஒழுக்கம், உடல்மொழி (இர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங்), சமயோகித புத்தி, தலைமை தாங்கும் திறன் போன்றவற்றைச் சோதித்து அறிவார்கள். சுருக்கமாகக் கூறினால் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு நீங்கள் எவ்விதத்தில் பொருத்த மானவர் என்பது நேர்முகத் தேர்வில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இறுதியில் மெயின் தேர்வு மொத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் இரண்டையும் கூட்டி இந்திய அளவில் ரேங்க் பட்டியல் தயாரிப்பர். அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 26 பணிகளில் ஏதேனும் ஒன்றில் நியமிப்பர்.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

பால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி:


சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக இன்று (5-10-2010) மட்டோஷ்ரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தார்.
பால்தாக்ரேயின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினகாந்த்
‘பால்தாக்ரே கடவுளுக்கு நிகரானவர் அவர் எனக்கு கடவுள் மாதிரி எனக் தெரிவித்துள்ளார். பி.டி ஐ நியுஸ்

ரஜினிகாந்த மஹாராஷ்ட்டிரிய தம்பதிகளுக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இப்ப மேட்டருக்கு வருவோம்…

மேற்கண்ட செய்திக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை எனினும் நம் இஸ்லாமிய சமூக இளைஞர்களுக்காக ஒரு சில வரிகள்..

இன்றைக்கு எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு எனக் கூறி தனது இளைய பருவத்தை வீணடித்துக் கொண்டிருகின்றனர். யார் இந்த ரஜினிகாந்த என்ற உண்மையை இந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் உணர வேண்டும். முஸ்லிம் இனமே இந்தியாவில் இருக்கக்கூடாது என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள பாசிச இயக்கத் தலைவன் தான் பால் தாக்ரே. இந்த பால்தாக்ரே தான் ரஜினிக்கு கடவுளாம்.

அப்படி எனில் கடவுளின் கொள்கையை (பாசிசம்) தான் பக்கதனும் (ரஜினி) பின் பற்றுவார் என்பது இதிலிருந்து தௌ்ளத் தெளிவாகத் தெரிகின்றது

பால் தாக்ரே கடவுள் மாதிரி என பகிரங்கமாகக் பேட்டியளித்து தனது பாசிச சிந்தனைக் கொண்ட காவி உருவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ரஜினகாந்த்.

நீ ரஜினி கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது உனக்கு நீயே சாவுமணி அடித்துக் கொள்வதற்கு சமம்..

நீ தியேட்டர் சென்று படம் பார்கும் பணமமெல்லாம் உன்னை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு நன்கொடையாக போகின்றது..

இனிமேலாவது திருந்துவார்களா நமது இஸ்லாமிய சமூக இளைஞர்கள்?

திங்கள், 4 அக்டோபர், 2010

ஆதார்' எனும் ஆதாரம்!

இந்தியாவின் முதல் தேசிய அடையாள அட்டை (ஆதார்) மகாராஷ்டிர மாநிலத்தில் ஓர் ஆதிவாசி குடியிருப்பில், ரஜ்னா சோனாவாணே என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முதல் தேசிய அடையாள அட்டையை யாரோ ஒரு பெருநகரவாசிக்கு அளிக்காமல், கடைக்கோடியில் உள்ள ஆதிவாசி குடியிருப்பில் தொடங்கியிருப்பது பாராட்டுக்குரியதுதான்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது, முதல் ஆதார அட்டை ஆகஸ்ட் 2010 முதல் பிப்ரவரி 2011-க்குள் வழங்கப்பட்டுவிடும் என்று இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம் அறிவித்த திட்டத்தின்படியே இது நடந்துள்ளது என்பதும்கூட, இவர்கள் சொன்னபடி 2014-ம் ஆண்டுக்குள் 60 கோடி மக்களுக்கும் ஆதார அட்டைகளை வழங்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை தருகிறது.
நகரவாசிகளைவிடவும் மிகவும் முக்கியமாக கிராம மக்களுக்குத்தான் இத்தகைய அடையாள அட்டை தேவையாக இருக்கிறது. ஆதார அட்டையைப் பெற்றுக்கொண்ட முதல் பெண் தனது நன்றி தெரிவிப்பில்கூட, "ஆதாரம் இனி என் வாழ்வின் ஆதாரம்' என்று கூறியிருப்பது மிகமிக உண்மை.
தற்போதைய சூழ்நிலையில் குடும்ப அட்டையை வங்கிகள்கூட ஓர் அடையாளமாக ஏற்கத் தயங்கும் அளவுக்குப் போலி குடும்ப அட்டைகள் மலிந்துவிட்ட நிலையில், எல்லா பயன்பாட்டுக்கும் பொருந்துகின்ற ஆதாரம் போன்ற அடையாள அட்டைகள் மிகமிக அவசியமாகின்றன. பன்னிரண்டு இலக்கங்கள் கொண்ட ஆதார அட்டை எண்ணைப் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து செல்போன் நிறுவனங்களும் இணைப்பை வழங்க முடியும். ஒருவேளை, ஆதார அட்டை எண்ணும் செல்போன் எண்ணும் ஒன்றாக இருக்கும் நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த ஆதார அட்டை உண்மையிலேயே ஏழைகளுக்குத்தான் அடிப்படையான விஷயங்களில் தேவையாக இருக்கிறது. முதலாவதாக உணவு, இரண்டாவதாக மருத்துவம், மூன்றாவதாகக் கல்வி. இந்த அட்டையை வழங்கிப் பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், ஆதாரம் இல்லாத காரணத்தால் ஏழைகளால் வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை, குடும்ப அட்டை பெற முடியவில்லை. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற முடியவில்லை. இந்த ஆதார அட்டை அத்தகைய நிலையைப் போக்கும் என்று கூறியுள்ளார். அது உண்மைதான். இருப்பினும், இந்த ஆதார அட்டை வெறும் ஆதாரமாக இல்லாமல், எல்லா பயன்பாட்டுக்கும் தொடர்புடைய ஆவணமாக மாற்றப்பட்டாக வேண்டும்.
இந்த ஆதார அட்டைகளை அடிப்படையாக வைத்து பொருள் விநியோகத்தைத் தொடங்கும்போது, ஏழையின் பெயரைச் சொல்லி உணவு தானியங்களை வேறு இடங்களுக்குக் கடத்தவும், பொது விநியோக மையங்களில் கொடுக்காமல் தவிர்க்கப்படுவதுமான நிலையைத் தவிர்த்துவிட முடியும். மேலும், இந்த ஆதார அட்டையில் இருப்பவர் எத்தகைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், எந்தெந்தத் தடுப்பூசிகள் அரசால் போடப்பட்டன, இவர் எந்தெந்தத் திட்டத்தில் பயனடைந்தார் என்கிற அனைத்துத் தகவல்களும் - இந்த ஆதார எண்ணைத் தட்டினாலே கணினியில் பார்க்க வகைசெய்ய முடியும். ஆதார அட்டையால் பயன்பெறப் போகிறவர்கள் முழுக்க முழுக்க ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த அட்டை ஒவ்வொரு இந்தியனின் பிறந்த தேதி, தாய் தந்தை, ஊர், மாவட்டம், மாநிலம், ரத்த வகை ஆகியவற்றோடு, ரேகைப்பதிவு அடையாளங்களையும் கொண்டிருக்கும் என்பதால் இதன் பயன்பாடு பலவகைப்பட்டதாக இருக்கிறது.
பெருவிரல் ரேகைப் பதிவு இருப்பதால் இதில் போலிகள் வராது என்றாலும்கூட, நம் அரசு ஊழியர்கள் செய்யும் குளறுபடிகளால் இத்திட்டம் அர்த்தமற்றதாக மாற்றப்படும் அபாயங்கள் உள்ளன. கைரேகைப் பதிவு சரியாக இருந்தாலும் பெயர் மாறுதல், தவறாக அச்சிடுதல், பிறந்த தேதியைத் தவறாகக் குறிப்பிடுதல் என்று எல்லா குளறுபடிகளையும் செய்யும் துணிவும் ஆற்றலும் கொண்டவர்கள் நம் அரசு இயந்திரத்தின் உறுப்புகளாக இருக்கிறார்கள். தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை இதற்கு ஒரு சான்று.
வாக்காளர் அடையாள அட்டைகளுக்காகப் புகைப்படம் எடுத்து, நேரடி சரிபார்ப்பு முடித்தும் பலருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவே இல்லை. தேர்தல் நேரத்தில் வழங்கப்படாமல், எங்கோ ஒளித்து வைக்கப்பட்டு, பிறகு குப்பையில் கொட்டப்பட்ட வாக்காளர் அட்டைகள் பற்றி நிறையச் செய்திகள் வந்தும், எந்தவொரு அதிகாரி, ஊழியர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.
வாக்காளர் பதிவேட்டில் உள்ளவருக்கு எப்படி அடையாள அட்டை மட்டும் இல்லாமல் போகும்? அதற்குப் பொறுப்பானவர் யார்? என்கிற விசாரணைகூட இல்லையென்றால், இதற்குக் காரணம் அலுவலர்களின் சோம்பேறித்தனமா அல்லது அரசியல்வாதிகளின் சதியா? எது உண்மை?
வாக்காளர் அடையாள அட்டை வழங்கவில்லை அல்லது தவறான புகைப்படம், பிழையான பெயரில் வழங்கப்பட்டது என்று சொன்னால், வருவாய்த் துறை அதிகாரிகள் ஒப்புக்கொள்வதில்லை.
தொலைந்துபோனதால் வேறு அடையாள அட்டை வழங்கக் கோரும் மனுவைக் கொடுத்து, வாக்காளரைக் குற்றவாளியாக்கும் நடைமுறைதான் தற்போது அமலில் இருக்கிறது.
இதே நிலைமை ஆதார அட்டைக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தவறுக்குக் காரணமான ஊழியர், அதைச் சரிபார்க்கத் தவறிய அலுவலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம். அதைச் செய்ய அரசு தயங்குமானால், வாக்காளர் அடையாள அட்டை குழப்பம் போலவே, ஆதார அட்டை அர்த்தமிழக்கும்.
நல்லதொரு தொடக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, குளறுபடிகளோ, குறைபாடுகளோ இல்லாத, எல்லா விவரங்களையும் உள்ளடக்கிய, எல்லா பயன்பாட்டுக்கும் உதவக்கூடிய அடையாள அட்டை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம், ஊடுருவல்கள் தவிர்க்கப்படுவது மட்டுமல்ல, சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தடுக்கப்படும்.

வியாழன், 8 ஏப்ரல், 2010

முடியும் என்று நம்புங்கள்


வெற்றி என்பது யார்கையில்
விவேகம் என்பது எத்துறையில்
பற்றித் துணிந்து செய்தாலே
பறந்து வருமே நம்பிக்கை

வெட்டி விட்டால் மரம் துளிர்க்கும்
விவேகம் வைத்தால் வெற்றிவரும்
துட்டிற்காக ஆசை வைத்தால்
தொடர்ந்து தூய்மை வெளியேறும்

தோல்வி வந்தால் துவளாமல்
தொடர்ந்து முயன்றால் வெற்றிவரும்
ஆல்போல் நெஞ்சம் உறுதி கொண்டால்
அனைத்தும் நமது கைக்குவரும்

கிடைக்கும் என்றநம்பிக்கை
கீழே விழுந்தும் துணிந்தெழுந்தால்
படைக்கும் ஆற்றல் கைக் கொண்டால்
பாரே நம்மைப் பாராட்டும்.

முயன்று முயன்று சாதித்து
முத்திரை ஒன்றினை நாம்பதித்தால்
வியந்து வருமே வெற்றியது
வெல்லும் ‘தன்னம்பிக்கை’ ஒன்றேதான்

புதன், 18 மார்ச், 2009

நந்தனத்தில் வேலை வாய்ப்பு முகாம் ...

முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் அரசுக் கல்லூரிகளில் இறுதியாண்டு படிப்பவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம். முன் அனுபவம் தேவையில்...
tamil.webdunia.com/newsworld/career/opportunities/0902/21/1090221022_1...-1624.00kb

வெப்துனியாவிலிருந்து மேலும் முடிவுகள்
window.google_render_ad();
Maalaisudar ...
வேலூர், ஆக. 21:- படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருவது இவ்விழாவின் ஒரு பகுதியாகும். இந்த முகாம் அடுத்த மாதம் காட்பாடியில் நடத்தப்படுகிறது. இதற்காக இம்மாதம் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் வேலூர், ஆம்பூர், அர...
maalaisudar.com/printer.php?id=18250 - 7.41kb
Placement consultants & job agencies in நன்டெட் ...
வேலை வாய்ப்பு நிபுணர்கள் - நன்டெட்- வாய்ப்பு நிபுணர்கள் வேலை வாய்ப்பு நிபுணர்கள் - நன்டெட் நன்டெட் நகரில் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் & நிபுணர்கள் குறித்து அறிய click.in-ல் பார்க்கவும். Speciality All job areas Accounting & Finance Advert...
nanded.click.in/tamil/classifieds/jobs/1/112/placement-consultants.htm... - 81.68kb
Placement consultants & job agencies in கர்னூல் ...
வேலை வாய்ப்பு நிபுணர்கள் - கர்னூல்- வாய்ப்பு நிபுணர்கள் வேலை வாய்ப்பு நிபுணர்கள் - கர்னூல் கர்னூல் நகரில் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் & நிபுணர்கள் குறித்து அறிய click.in-ல் பார்க்கவும். Speciality All job areas Accounting & Finance Advert...
kurnool.click.in/tamil/classifieds/jobs/1/112/placement-consultants.ht... - 79.89kb
Placement consultants & job agencies in நிசாமாபாத் ...
வேலை வாய்ப்பு நிபுணர்கள் - நிசாமாபாத்- வாய்ப்பு நிபுணர்கள் வேலை வாய்ப்பு நிபுணர்கள் - நிசாமாபாத் நிசாமாபாத் நகரில் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் & நிபுணர்கள் குறித்து அறிய click.in-ல் பார்க்கவும். Speciality All job areas Accounting & Finance ...
nizamabad.click.in/tamil/classifieds/jobs/1/112/placement-consultants.... - 80.90kb
Placement consultants & job agencies in பிரகாஷம் ...
வேலை வாய்ப்பு நிபுணர்கள் - பிரகாஷம்- வாய்ப்பு நிபுணர்கள் வேலை வாய்ப்பு நிபுணர்கள் - பிரகாஷம் பிரகாஷம் நகரில் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் & நிபுணர்கள் குறித்து அறிய click.in-ல் பார்க்கவும். Speciality All job areas Accounting & Finance Adve...
prakasam.click.in/tamil/classifieds/jobs/1/112/placement-consultants.h... - 80.01kb
கருணாநிதி பிறந்தநாள் -வேலை வாய்ப்பு முகாம் ...
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருவதுதான் இந்த விழாவின் நோக்கமாகும். இந்த முகாம் செப்டம்பர் மாதம் காட்பாடியில் நடத்தப்படும். இதற்காக இந்த மாதம் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் வேலூர், ஆம்பூ...
aol.in/tamil/news/2008/08/23/tn-vellore-dmk-to-conduct-job-expo.html - 52.17kb
கலைஞர் நழுவ விட்ட வாய்ப்பு/ ...
கலைஞர் நழுவ விட்ட வாய்ப்பு/ ...
maatru.net/maatru.net/topic/கலை�%9... - 7.64kb
விபரம் - செய்திகளின் தொகுப்பு ...
தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்களிடம் பல லட்சம் மோசடி: நேர்முக தேர்வு நடத்தி பண- தார்கள். எங்களின் வேலை வாய்ப்பு அட்டையை பதிவு செய்த அதிகாரியே அங்கு பேண்ட்-சட்டை அணிந்து அமர்ந்து இருந்தார். தான் தொழிலாளர் நலத்துறை அதிகாரி, உங்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் (அப்பாயிண்மெட் ஆர்டர்) மு...
viparam.com/index.php?news=1284 - 28.34kb
Sify தமிழ் Tamil Tamil News TN Politics, Astrology, ...
Monday, Jan 5, 2009 வேலை வாய்ப்பு - 2009 வருக‌ 2009 கட்டுரைகள் சக்தி சக்திதாசன் தமிழ்த்தேனீ ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ வெற்றி நமதே கவிதைகள் வாஷிங்டன் செந்தில் சுவாதி சுதா வேதம்...
tamil.sify.com/special/newyear2009/ - 0.00kb
வேலை வாய்ப்புகள்-தில்லி, குர்க்கான் & நொய்டா ...
தில்லி, குர்க்கான் & நொய்டா நகரில் கால் சென்டர், பொறியியல், மார்க்கெட்டிங் உள்ளிட்ட வேலை தேட / வேலைக்கு ஆட்கள் தேட இங்கு விளம்பரம் செய்யலாம். - (135) - (33) - (28) - (89) - (62) - (87) - (29) - (15) -...
delhi.click.in/tamil/classifieds/1/59/jobs.html - 123.07kb

உலகத்தை நாம் வாங்கிவிடுவோம்

உலகத்தை நாம் வாங்கிவிடுவோம் !
டென்மார்க் பொருளாதாரம் தற்போது கொடி கட்டி பறக்குது என்றே கூறவேண்டும். அடுத்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தினை மிகவும் திறமையாக அட்டவணைப் படுத்தி பேசிய நிதி அமைச்சர் தோ பீட்டர்ஸ்சன், இன்னும் சில வருடங்களில் உலகத்தை நாம் வாங்கி விடலாம் என நகைச்சுவையாக கூறினார்.

அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பெரும்பான்மையான கட்சிகளின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தாலும், முக்கியமாக டெனிஸ் மக்கள் கட்சியின் செல்வாக்கு இந்த முறையும் வரவு செலவு திட்டத்தில் பாவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய விடயமாக வயோதிபர்களுக்குரிய சலுகைகள் மேலதிகமாக இம்முறையும் கூட்டப்படவுள்ளது. புதிதாக தெரிவு செய்யப்பட்ட நகரசபைகள், மாகாணங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்தள்ளது.
வேலைவாய்பு
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்தில் முதல் தடவை வந்த பொழுது, டென்மார்க் நாட்டில் கிட்டத்தட்ட 200.000 மக்கள் வேலை வாய்புகள் இல்லாமல் இருந்தனர். ஆனால் இன்றோ 200.000 தொழில் வாய்புகள் இருந்தும், அதற்கு ஆட்பற்றாக்குறை இருப்பதை காணமுடிகின்றது. இதில் முக்கியமாக வீடுகள் கட்டும் துறையில் அநேக வேலைகள் உண்டு. எனவே டென்மாhக் நாட்டிற்கு தொழில் சம்பந்தமாக கிழக்கு ஐரோப்பாவில் இருந்து பெருந்தொகையான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். முக்கியமாக போலண்ட் நாட்டில் இருந்து பெருந்தொகையானோர் தொழில் அடிப்படையில் வருகின்றனர்.
இப்படி வருகின்ற தொழிளார்கள், டேனிஸ் தொழிளார்களை விட மிகவும் குறைவான ஊழியத்தில் அமர்த்தப்படுவதாக சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் அநேக வேலைவாய்பு இருப்பதால் முக்கியமாக கைதொழில் சம்பந்தமான வேலைகளில் கறுப்பு வேலை ( வரி கட்டாமால் வேலை செய்வது ) குறைந்து விட்டது எனக் கூறப்படுகின்றது. எனவே தொழில் வாய்புகள் பெரும் வாரியாக எல்லா துறையிலும் இருப்பதாக கூறப்படுகின்றது.
கையில் நிறைய காசு
கடந்த இரு வருடங்களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பெருபான்மையான மக்கள் மத்தியில் பணப்புழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது.
புதிய வீடுகள் வாங்குவது, புதிய வாகனங்கள் வாங்குவது ஒரு புறம் இருக்க நடுத்தரவர்க்க மக்கள் வெளிநாடுகளில் வீடுகள் வாங்குவது அதிகரித்துள்ளது. இதிலும் முக்கியமாக ஸ்பானியனின் பல கடலோர பகுதிகளில் டேனிஸ் மக்கள் வீடுகளை வாங்குகின்றனர். இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த ஒருவர், எமது வயோதிப காலத்தில் இங்கு வந்து எமது காலத்தை கழிப்பதுடன், விடுமுறைக் காலங்களிலும் வந்து செல்லலாம் எனக் கூறியுள்ளார். இதே போன்று துருக்கி நாடு, பல்கேரியா, போன்ற நாடுகளிலும் வீடுகள் வாங்கப்படுகின்றன.
சில வருடங்களுக்கு முன்னால் பார்ப்போமாயின் மிகவும் வசதி படைத்தவர்கள் மட்டும்தான் இப்படியான வீடுகளை வாங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.
எமது நிலமை
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் இந்த பணப் புழக்கம் அதிகரித்துள்ளது என்றே கூறவேண்டும். கடந்த வருடங்களில் டென்மார்க்கில் வீடுகள் வாங்கும் தொகை அதிகரித்தள்ளது என்றே சொல்ல வேண்டும் ஆனால் எவ்வளவு வீதத்தில் அதிகரித்தள்ளது என்ற கணிப்புகள் இல்லை. இதை விட தாயகத்தில் சொத்துகள் வாங்கி விடுவதிலும் புலம் பெயர் மக்கள் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது. இது சம்பந்தமான சரியான கணிப்புகள் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அநேக தொழிற்சாலைகளில் தொழில் புரியும் குறிப்பிட்ட வீத எம் மக்கள், தம் வேலை நேரத்தை விட மேலதிகமாக தொழில் புரிவதையும் காணமுடிகின்றது. இந்த மேலதிக தொழிலை தாம் விரும்பியே எம்மவர் செய்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதை விட மேல் கல்வி பயில்கின்ற எம்மவர், மேல் கல்வியை முடித்தவுடன் வேலை வாய்பை பெற்றும், பெறுகின்ற நிலமையிலும் உள்ளனர். எனவே பெருபான்மையான புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், டென்மார்க் பொருளாதார வளர்ச்சியின் பலனை அனுபவிக்கின்றனர்.
உதவிப்பணம் பெறுபவர்கள்
தற்போதைய அரசாங்கத்தின் கடுமையான சமுதாய உதவிச் சட்டங்களினால், நகரசபைகளின் கீழ் உதவிப் பணம் பெறுபவர்களுக்குரிய நிபந்தனைகள் மிகவும் இறுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக உதவிப்பணம் பெறுபவர் ஒருவர் வருடத்துக்கு 300 மணித்தியாலங்கள் ஏதாவது ஒரு வேலை கட்டாயமாக செய்தல் வேண்டும், இல்லையேல் உதவிபணம் நகரசபையால் நிறுத்தப்படும் எனக் கூறப்படுகின்றது. இதே போன்ற நிலைமைகள் முன்பு இருந்தாலும், இவை மிக இறுக்கமாக இருந்ததில்லை. உதவிப்பணம் பெறும் ஒருவர் சுகயீனமாக சில நாட்களுக்கு மேல் வேலைக்கு போகமுடியாத பச்சத்தில், வைத்திய அறிக்கை சமர்பிக்க பட வேண்டும் என கூறப்படுகின்றது. வைத்திய அறிக்கை இல்லாவிட்டால் உதவிப்பணம் நிறுத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் கடுமையான சட்டங்கள் மூலம் உதவிப்பணம் பெறும் பெருபான்மையானோரை நிரந்தர வேலை வாய்புக்குள் கொண்டு வருவதுதான் பிரதான நோக்கமாக இருந்தாலும், உதவிப்பணம் பெறும் பெருபான்மையான மக்கள் நிரந்தர வேலை உடனியாக பெறும் வாய்புகள் இல்லை என்றே கூறவேண்டும். எனவே இந்த உதவிப்பணம் பெறுபவர்கள் மத்தியில் ஒர் அளவு பணம் இருந்தாலும், நிரந்தர தொழில்கள் செய்வர்களை விட மிக குறைவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் ஏற்ற, தாழ்வு வருதற்கும், இதனால் மக்களிடையே பெரிய இடைவெளியைத் தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்த குறிப்பிட்ட வீத மக்களை ஏழைகள் என்றோ, வசதிகள் இல்லாதவர்கள் என்றோ சொல்லிவிடமுடியாது ஆனால் இவர்களிம் பணப் புழக்கம் குறைவாக இருப்பதற்கு நிறைய வாய்புகள் உண்டு.
ஏற்கனவே உலகத்தில் செல்வந்த நாடாக விளங்கும் டென்மார்க், இந்த பொருளாதார வளாச்சி தொடருமாயின் வரும் காலங்களில் இன்னும் செழிப்பாக வருவதற்கு வாய்பு உண்டு.
ஆய்வாளர். யோசப் அருளையா 08.09.06

ஸரின்பிளாஸா அங்கடியில்

ஸரின்பிளாஸா செல்சர்வீஸ்
செல் சர்வீஸ் போட்டோ கிராபிக்ஸ்
ளாமிநேசன் சர்வீஸ் மற்றும் பல சேவைகள் உண்டு

ஸரின்பிளாஸா அங்கடியில்

hanifa bismi
tenkasi vadakarai 627812 KK.SANT, NELLAI TAMILNADU, India
எங்கள் கடைகளில் -செல் சர்விஸ் போட்டோ கிறாபிஸ் I S T D தெலை பேசி உண்டு வாடிக்கையாளர்களுக்கு நன்றி